உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மீன்பிடி துறைமுகத்தில் 20 படகுகள் எரிந்து நாசம்!

மாத்தறை- குருபொக்குன மீன்பிடி துறைமுகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிபத்தில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 20 படகுகள் தீயினால் சேதமாகியுள்ளன.

தங்காலை தீயணைப்பு துறையினால் இத்தீவிபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும், இவ் விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க