உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களுக்கு அனுமதி மறுப்பு: விளக்கமளிக்க உத்தரவு

முஸ்லிம் வியாபாரிகளை தங்கொட்டுவ சந்தையில் அனுமதிக்கவேண்டாம் என்ற கோரிக்கை தொடர்பில் விளக்கமளிக்குமாறு புத்தளம் வென்னப்புவ பிரதேச சபையின் தலைவரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 28ஆம் திகதி பிரதேசசபையின் தலைவர் உட்பட்ட 6பேரை நீதிமன்றுக்கு சமுகமளிக்குமாறு மாரவில நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேரா அண்மையில் தங்கொட்டுவ காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில்;, தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கவேண்டாம் என்று கேட்டிருந்தார்.

பிரதேசத்தின் பொதுமக்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமையவே இந்தக்கோரிக்கையை விடுப்பதாக பிரதேசசபை தலைவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அமைதியான சூழ்நிலை ஏற்படும் வரை தற்காலிகமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கடிதத்தில் கோரியிருந்தார்.

கருத்து தெரிவிக்க