உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் உதவ தயார்- அவுஸ்திரேலிய பிரதமர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரணையில் உதவி செய்வதில் தமது நாடு திருப்திக்கொள்கிறது என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டமைக்காக மொரிசனுக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மொரிசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக்கடிதத்தில் இலங்கைக்கு நீண்ட காலத்தில் தொடர்ந்தும் உதவ அவுஸ்திரேலியா விருப்பம் கொண்டுள்ளதாக மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க