உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு வாரம்- வடக்கில் வாகன பவனி நிகழ்வு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையிலான வாகன பவனி நிகழ்வு இன்று காலை மன்னாரில் ஆரம்பமானது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியில் இருந்து குறித்த வாகன பவனி ஆரம்பமானது.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் நடை முறைப் படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க