சினிமா

கனவு நனவாகிய சந்தோசத்தில் டாப்ஸி

வீடு வாங்கிய கனவு நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

30 வயதை அடைவதற்கு முன்னால் சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும். நிரந்தரமாக ஒரு தொழில் இருக்க வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது.

அதனால்தான் எனது தந்தையை சம்மதிக்க வைத்து சினிமாவுக்கு வந்தேன். இப்போது எனது கனவு நிறைவேறி இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே நேரத்தின் முக்கியத்துவம் தெரியும். அதை எப்போதும் வீணாக்கியது இல்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன்.

இவ்வளவு பெரிய நடிகையாக ஆனபிறகும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படவில்லை. சிக்கனமாக செலவு செய்கிறேன்.

வரவு செலவு கணக்கையும் எழுதி வைத்துள்ளேன்.இதனால் வீடு வாங்கும் கனவு நிறைவேறியது என டாப்ஸி நெகிழ்ந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க