சினிமா

நாட்டை மாற்ற ரௌத்திரம் பழகுகிறேன்-கமல்ஹாசன்

பாரதி சொன்னது போல ரௌத்திரம் பழகுகிறேன் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு சென்று மீண்டும் பிக்பொஸ் நிகச்சிக்குள் நுழைந்தது தொடர்பில் விமர்சிக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஜய் டி.வி ஆரம்பித்திருக்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3 வது சீஸனின் முதல் நாளில் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

”இது எனக்கு முக்கியமான மேடை என்பதை விட கடல் போன்ற மக்களை சென்றடைய ஒரு பாலமாகவே நினைக்கிறேன்.

என்னை நானாக காட்டிய ஒரு அற்புதமான மேடை.  வந்தாரை வாழவைப்பது தமிழ்நாடுதான். ஆனால் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும்.

நல்ல நாட்டை பார்த்தாலும் கோபம். நமது நாட்டை பார்த்தாலும் கோபம். ஏனென்றால் எனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே எனக்கோபம்.

ஷவரில் குளிப்பவர்களை பார்த்தாலும் கோபம். சாக்கடையில் தண்ணீரை கலப்பதை பார்த்தாலும் கோபம். நாட்டை மாற்ற வேண்டுமானால் கோபம் வேண்டும்.

ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். அதனால்தான் நான் பாரதி சொன்னதுபோல ரௌத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க