உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வென்னப்புவ – தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை!

வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொடுவ பகுதியில் இருக்கும் வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவித்தல் கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்கள் பொது சந்தை பகுதிக்கு வருவதற்கு ஏனைய மக்களும் வியாபார சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பிரதேச சபை தலைவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க