- மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.
- ஒருவர் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.
- நிதானமே தலை சிறந்தது. எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
- இந்தப் பிறவியில் செய்த நன்மையின் பயன், மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.
- சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது.
கருத்து தெரிவிக்க