உள்நாட்டு செய்திகள்

‘புதிய அரசியல் கூட்டணி’ – ஆறாம் சுற்று பேச்சு நாளை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான ஆறாம் சுற்று பேச்சுவார்த்தை நாளை (26) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்குமிடையிலான ஆறாம் சுற்று கலந்துரையாடல் கடந்த 17 ஆம் திகதியே நடைபெற இருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக சந்திப்பு 26 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு பிற்போடப்பட்ட சந்திப்பே நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு கட்சிகளுக்குமிடையிலான ஐந்தாம் சுற்று  கடந்த 7 ஆம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க