உள்நாட்டு செய்திகள்புதியவை

மட். திராய்மடு வனப்பகுதியில் பாரிய தீப்பரவல்!

மட்டக்களப்பு, திராய்மடு வனப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுமார் 3 ஏக்கர் நிலம் அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தீயை மட்டக்களப்பு பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் நகர சபையின் அதிகாரிகளுடன், முப்படையினரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், அது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க