உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? கருத்து மோதல் உக்கிரம்

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரையில் அது குறித்து கற்பனை அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிடக்கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், அமைச்சர்களான தலதா அத்துகோரள,  சந்திராணி பண்டார, அஜித் பி பெரேரா ஆகியோர், சஜித் பிரேமதாசவே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவித்துவருகின்றனர்.

இதற்கு ஐ.தே.கவின் உப தலைவரான ரவி கருணாநாயக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இத்தகைய அறிவிப்புகள் கட்சியின் கூட்டுப்பொறுப்பைமீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், தந்தையில் பெயரை வைத்து அரசியல் நடத்தும் காலம் மலையேறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவுக்குள் கருத்து முரண்பாடு வெடித்துள்ளது.

 

கருத்து தெரிவிக்க