விளையாட்டு செய்திகள்

முக்கியமான போட்டியில் மோதும் பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள்

உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சஃப்ராஸ் அஹமட்டும் தென்னாபிரிக்க அணிக்கு ஃபஃப் டூ பலசிஸும் தலைமை தாங்குகின்றனர்.

புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

உலகக் கிண்ண தொடரின் 30ஆவது போட்டியான இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க