உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மைத்ரிபால தேர்தலில் போட்டியிடமாட்டார்…..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போட்டியிடாமல் ஒதுங்கக்கூடும்.

பதிலாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பார் என்று கொழும்பு அரசியலில் பேசப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கௌரவமான முடிவை எடுக்கும் என்று அண்மையில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த கௌரவமான முடிவு அவர் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்சவுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க