விளையாட்டு செய்திகள்

ஆஃப்கானிஸ்தானை போராடி வென்றது இந்தியா!

உலகக் கிண்ண தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடி 11 ஓட்டங்களால் வென்றது.

இன்று சனிக்கிழமை த ரோஸ் போல் சவுதம்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோஹ்லி 67 ஓட்டங்களையும் கேதர் யாதவ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ஹுல்படின் நைப் மற்றும் மொஹமெட் நபி ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

225 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் மொஹமெட் நபி 52 ஓட்டங்களையும் ரஹமட் ஷா 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பூம்ரா, யுவேந்த்ர சஹால், மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

 

கருத்து தெரிவிக்க