உள்நாட்டு செய்திகள்புதியவை

ரெயில் போக்குவரத்து இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும்!

ரெயில் பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரெயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க தொடங்கொட இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பணியாளர்களுக்கும் நாளை முதல் தங்களது கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க