கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பில் மாபெரும் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படும் நிலையில் மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மட்.மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 2005 கல்வி பொதுத் தராதர உயர் தர பழைய மாணவர்களின் அனுசரணையில் இந்த முகாம் இடம்பெறவுள்ளது.

பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்ச்சியாக 06 வது வருடமாக இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் உயிர் காக்கும் உதிரத்தை தானமாக அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்து தெரிவிக்க