உள்நாட்டு செய்திகள்புதியவை

இனியும் இனவாதம் வேண்டாம்-ஹர்ஷ டி சில்வா

அரசியலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதம் என்ற ஆயுதத்தை அரசியல் வாதிகள் கையிலெடுக்ககூடாது என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” இனவாதத்தால்தான் இந்த நாடு கடந்த காலங்களில் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிலர் இனவாதத்தை தூண்டுகின்றனர்.  இதனால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை படிப்பினையாகக் கொண்டு ஐக்கியமாக வாழ்வதற்கு நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும்.  இனவாதம் பேசும் அரசியல்வாதிகளை அந்தந்தக் கட்சிகள் கட்டுப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க