மலையகச் செய்திகள்

தண்ணீர் இன்றி தவிக்கின்றோம்- மடக்கும்புர மத்திய பிரிவு மக்கள்

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடக்கும்புர மத்திய பிரிவில் தண்ணீர் இன்றி தவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுங்காலமாகவே இங்கு தண்ணீர் பிரச்சனை காணப்பட்டு வருகிறது.  தண்ணீரை பெற முறையான வழிகள் இன்றி ஊற்றுகளையும் கிணறுகளையும் தேடி செல்கிறோம் என ஊர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பாக குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்ற போது,

தோட்ட நிர்வாகத்தால் நீர் வழங்கப்பட்டாலும் நீர்க்குழாய்களை முறையாக பராமரிக்காமையால் எமது பகுதியில் நீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் நீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிட்டும் என தெரிவித்த அரசியல்வாதிகளும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தோட்ட நிர்வாகமும் அலட்சியம் செய்கிறது.

இந்நிலை தொடருமானால் நீருக்காக கையேந்தும்  நிலை ஏற்படும் எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எமது நீர் பிரச்சினையை தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க