வடக்கு செய்திகள்

மன்னார் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று ஆகஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,தன்னார்வ தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை மீட்டுக்கொள்ளுதல், விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறிய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,  உட்பட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

கருத்து தெரிவிக்க