உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் தௌஹீத் ஜமாத் பிரதிநிதிகள் சாட்சியம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியங்களை பதிவுசெய்து வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் சில சாட்சியப்பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று இந்தக்குழுவின் முன் இலங்கை தௌஹீத் ஜமாத்தின் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தின் பிரதிநிதிகள் தமது சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளனர்.

(தற்கொலையாளி -ஸஹ்ரான் ஹாசிமின் அமைப்பு தேசிய தௌஹீத் ஜமாத் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த சாட்சியப்பதிவுகள் இன்று பிற்பகல் 2மணிக்கு ஆரம்பமாகின்றன.

கருத்து தெரிவிக்க