இந்தியா

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

அடுத்த 6 நாட்களில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள 4-ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.30 மணியளவில், ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்தக்கப்பட்ட பணிகள் குறித்து அவர்களின் கருத்துகளையும், முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். இதற்கு முன்பு ஒவ்வொரு முறை ஊரடங்கு நீடிக்கப்படும் முன்பும், 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க