வடக்கு செய்திகள்

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தை சேர்ந்த சுமார் 30 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வாய்ப்புக்கள் உள்ளமையை ஆதாரப்படுத்தும் வரைபடத்தினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது. நாகர் இலுப்பைக்குளம் கிராமத்தில் வாழும் சுமார் 34 குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பில் நாம் பல தடவைகள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கும் தெரிவித்துள்ளோம்.இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கும் வீடுகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. எனவே எமக்கு வீடுகளை வழங்குமாறு கோருகின்றோம் என தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க