வடக்கு செய்திகள்

வல்வெட்டித்துறை பகுதியில் 60 கிலோ கஞ்சா பொதி மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கஞ்சா பொதி நேற்று மாலை வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கெருடாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதி ஒன்றும் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இன்னொரு கஞ்சாபொதியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மொத்தமாக 60 கிலோகிராம் கொண்டதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா போதையுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வல்வெட்டித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க