உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்கள் வேண்டும்: அஸ்கிரிய பீடம்

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

யட்டிநுவர, தியகெலினாவ – கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் சமய நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

சிங்கள மக்களை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன அவற்றை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களால் மாத்திரமே நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க