கிழக்கு செய்திகள்

சுழல் காற்றிலினால் மரங்கள் வீழ்ந்து வீடுகள் சேதம்

மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய சுழல் காற்றினால் காங்கேயனோடை ஈரான் சிற்றி வீட்டுத்திட்ட வீதிகளில் பாரிய மரங்கள் வீழ்ந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட வீட்டு கூரைகள் மற்றும் தண்ணீர் தாங்கியும் சேதமடைந்துள்ளன.

குறித்த வீட்டுத்திடத்திற்கு செல்லும் பிரதான வீதியில் ஒரு பாரிய மரமும் மாவிலங்கதுறையிலிருந்து காங்கேயனோடை ஈரான் சிற்றி வீட்டுத்திற்கு செல்லும் வீதியில் மூன்று பாரிய மரங்களும் வீழ்ந்துள்ளன.

இந்நிலையில் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.பி.எம்.றசீம், எம்.எம்.நசீம் ஆகியோர் இந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க