உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே – ரவூஃப் ஹக்கீம் புகழாரம்

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் பெரும் ஆதரவு எப்போதும் உள்ளது என்பதை நாம் உணரமுடியும் எனவும் அவர் கூறினார்.

புலிகள் அமைப்புக்கு என்று கட்டமைப்பு இருந்தது. அரசியல் கொள்கை இருந்தது. அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க