இலங்கை

நாளை காலை கட்டாரிலிருந்து நாடு திரும்பவிருந்த ஒரு தொகுதி இலங்கை மக்களின் பயணம் இடைநிறுத்தம்.

நாளைய தினம் கட்டாரிலிருந்து சிறீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஊடக நாடு திரும்பவிருந்த 273 இலங்கையர்களின் பயணம் தற்காலிமாக இடை நிறுத்தம் செய்யப்படுளளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பதே தெரிவித்துள்ளார்.

அண்மையில் குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட 466 பிரஜைகளும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருவதாலும், அதில் 70 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளமையாலும் நாளை இடம் பெறவிருந்த இந்த நடவடிக்கை தற்காலிமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க