இலங்கை

சூடுபிடித்துள்ள உலக கிண்ண சர்ச்சை! விசாரணைகள் ஆரம்பம்

2011ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே, 2011ம் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கான முறைப்பாடொன்றை எடுத்துக்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு, விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து, இதுதொடர்பில் மேலதிகமாக ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும குறித்த இந்த விசாரணை தொடர்பிலான வாராந்த அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க