உள்நாட்டு செய்திகள்புதியவை

போக்குவரத்து சபை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நிறைவு

இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை தேசிய சேவை சங்கத்துடன் இணைந்து இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஒரு மாதத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வழங்கிய இணக்கப்பாட்டுக்கு அமைய பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க