Uncategorized

ராஜித சேனாரத்னவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி திருமலையில் போராட்டம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்கிறார். அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளார் எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமைச்சரின் முறைகேடுகள் தொடர்பாக தாம் ஆதாரங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டுள்ள போதிலும் இதுவரை காலமும் அவருக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க