உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்காலிகமாக இடைநீக்கம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் பகிடிவதைக்கு எதிர்ப்பு வெளியிட்டமைக்காக மாணவர் ஒருவர் மீது குறித்த ஐந்து மாணவர்களும் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் வழமையான முறையில் இடம்பெறும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க