உள்நாட்டு செய்திகள்புதியவை

2019ஆம் ஆண்டில் 170 பேர் எச்.ஐ.வி தொற்றினால் பாதிப்பு!

2019ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 170 பேர் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில், எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3200இக்கும் அதிகம் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விஷேட வைத்தியர் திருமதி. சந்திரிகா ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களுள் எச்.ஐ.வி தொற்று பாலியல் செயற்பாடு காரணமாக ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்.ஐ.வி தொற்று பாலியல் நோயை அடையாளம் காண்பதற்கு இரத்த பரிசோதனை மாத்திரம் போதுமானது. இது தொடர்பான இரத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வைத்தியசாலைகளிலும் இந்த பரிசோதனை இடம்பெறுகின்றது. குறுகிய நேரத்திற்குள் எச்.ஐ.வி தொற்றை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தற்பொழுது மேற்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் திருமதி. சந்திரிகா ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க