உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நரேந்திர மோடி பாகிஸ்தான் வழியாக செல்லவில்லை


கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வானூர்தி பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக செல்லவில்லை.

மாறாக ஓமன், ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக அவரின் விமானம் செல்லவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பிரதமர், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க