உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தெரிவுக்குழுவின் விசாரணைகளை இனி செய்தியிட முடியாது!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் பற்றி விசாரணை செய்து வருகின்ற நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளை செய்தியிடலுக்கு இனி ஊடகங்களுக்கு அனுமதி வழங்காமலிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பதில் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரட்ண தலைமையில் இன்று பகல் கூடிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் சந்திப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைய தினம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் இளங்ககோன் உள்ளிட்டவர்கள் நாளைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க