சினிமா

வரலாற்றை தவறாக பேச வேண்டாம் – பா.ரஞ்சித்துக்கு கருணாஸ் பதிலடி

ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் வரலாற்றை தவறாக பேச வேண்டாம் என இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு கருணாஸ் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அறிக்கை ஒன்றின் ஊடாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாறு தெரிந்து கொள்ளாமல் கட்டுக்கதைகளெல்லாம் தேவைகளுக்கு ஏற்ப பரப்பவேண்டாம். ராஜராஜ சோழனை கொச்சைப்படுத்தி ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்ப் பேரரசன் இராஜராஜ சோழன் என்பவன், இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம். தமிழர் மரபின் உச்சம். தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட வேண்டும். அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று பேசக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க