உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பில் தெரிவுக்குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் மூலம் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் இன்று 2 மணியளவில் கூடிய தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட வேளையில் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க தயாரில்லை என குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் தமது தனிப்பட்ட முடிவை தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க