சினிமா

திரைத்துறையில் 17 ஆண்டுகள்’ – ‘தனி ஒருவனுக்கு’ குவியும் வாழ்த்துக்கள்..!

தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமானாலும், தமிழில் 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகினார் ஜெயம் ரவி. சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து வந்த நடிகர் என்ற போதும் தனது சிறந்த நடிப்பால் அவர் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

எம். குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் தொடங்கித் தனி ஒருவன் மற்றும் கோமாளி போன்ற படங்கள்வரை இவர் ஏற்று நடிக்காத கதைக்களம் இல்லை என்றே கூறும் அளவிற்குச் சிறந்த நடிகராக விளங்குகின்றார் ஜெயம் ரவி. தனி ஒருவன் மற்றும் மிருதன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே என்றபோதும் அந்த படங்களை எதிர்நோக்கி அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு பூமி, ஜனகனமன மற்றும் மணி ரத்தினத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயம் ரவி திரையுலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க