சினிமா

கதாசிரியரும் நடிகருமான கிரேஸி மோகன் காலமானார்

தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசியருமான கிரேஸி மோகன் (66) காலமானார்.

உடல்நலக் குறைவு காரணாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்

தமிழ்சினிமாவில் திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கே. பாலச்சந்தர், அவரது பொய்க்கால் குதிரை என்ற திரைபடத்தில், கிரேஸி மோகனை வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க