உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கருத்து வேறுபாட்டால் விசாரணை முடிவுகள் வெளியாகுவதில் சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளினால் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளியிடப்படுமா? என்ற சந்தேகம் எழுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அக்மீமன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது நீண்டகால திட்டத்தின் ஒரு விளைவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் எனவும் இது இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய தாக்குதலா? அல்லது வெளிநாட்டில் மேற்கொள்ள வேண்டிய தாக்குதலா என்பது விசாரணைகளின் முடிவிலேயே தெரியவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க