உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் – அறிக்கை ஜனாதிபதி கையில்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்த விஷேட குழு அது குறித்த அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அமைக்கப்பட்ட விஷேட விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தி அறிக்கையை தயாரித்துள்ளது.

குறித்த அறிக்கை அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது இரண்டு இடைக்கால அறிக்கைகள் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அந்த விஷேட விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க