உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

“நான் உரிய நேரத்தில் வருவேன்”- சஜித் பிரேமதாஸ

சிலர் இந்த நாட்டின் உரித்து தமக்கு இலவசமாக கிடைத்துவிட்டது என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர்

எனினும் அது ஜனநாயகமல்ல என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது மக்களுடைய அரசாங்கம் அதனை யாரும் மறந்துவிடக்கூடாது என்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சஜித் பிரேமதாஸ குறி;ப்பிட்டுள்ளார்.

இதேவேளை பார்வையாளர் மத்தியில் இருந்த சிலர் நாட்டின் தலைமைத்துவத்துக்காக சஜித் போட்டியிடவேண்டும் என்று சத்தமிட்டனர்.

இதன்போது கருத்துரைத்த சஜித் பிரேமதாஸ, “கவலைப்படவேண்டாம் நான் வருவேன். உரிய நேரத்தில் நான் வருவேன்” என்று தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க