முல்லைத்தீவு- மல்லாவி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் இருந்து இலத்திரனியல் முறை மூலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது
சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“மைத்திரி ஆட்சி நிலையான நாடு” கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் நலம் பெற்று ஆரோக்கியம் மிக்க மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க