சினிமா

எந்திரன் பட வழக்கு-உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

எந்திரன் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டை எழும்பூர் நீதிமன்றம், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. காப்புரிமை மற்றும் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதமாறனுக்கு எதிராக மேற்படி முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அந்த வழக்கில்  விசாரணையை தொடங்கியது நீதிமன்றம். இந்த நிலையில் வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் இருவர் மீதான மோசடி குற்றசாட்டை  ரத்து செய்து உத்தரவிட்டார்.

காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் மீதான முறைப்பாட்டுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கருத்து தெரிவிக்க