உலகம்

தென்கொரியா மீது இராணுவ நடவடிக்கை : வடகொரிய ஜனாதிபதியின் தங்கை

தென்கொரியாவுடனான எல்லா தொடர்புகளையும் துண்டிக்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வடகொரிய ஜனாதிபதியின் தங்கையும், அந்நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர்களுள் ஒருவருமான கிம் ஜோ ஜோங் , தென்கொரியா மீது இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்திருந்தார்.

தென்கொரியா மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி, வடகொரியா இராணுவத்திற்கு தாம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்கள் மூலம் சில இரகசிய தகவல்களை தென்கொரியாவிற்கு சிலர் கடத்துவதாக வடகொரியா குற்றம் சாட்டியிருந்தது. இதனை தடுக்க தவறிய தென்கொரியா அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் வந்துவிட்டதாக கிம் ஜோ ஜோங் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் தேவையில்லாமல் தலையிடுவதாக தென்கொரியாவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க