வெளிநாட்டு செய்திகள்

தமிழகத்தில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவின் கொச்சி பகுதியில் நிபா வைரஸ் பரவியுள்ள நிலையில் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அங்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா அறிகுறிகள் தொடர்பான தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த தாதி ஒருவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க