மலையகச் செய்திகள்

சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற சாரதி கைது

சட்டவிரோதமான முறையில் மண்ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மொனராகலை மெதகம பகுதியில் நேற்று பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மெதகம பிரதேச சபைக்கு சொந்தமான மேற்படி டிப்பர் வாகனம் போக்குவரத்து அனுமதி இன்றி செலுத்தப்பட்ட நிலையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதோடு சொத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க