உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சாமிமலையில் மாணவிகளை சீண்டிய நாய் – நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம்

ஹட்டன் – சாமிமலை டீசைட் தமிழ் வித்தியாலய இரண்டு மாணவிகளை அதே பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வளர்ப்பு நாய் சீண்டியதால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பவத்தை அடுத்து பாடசாலை வளாகத்தில் தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டதால் பாடசாலை நிர்வாகத்திற்கும் மக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆசிரியரின் வளர்ப்பு இதற்கு முன்பு இரண்டு மாணவர்களை சீண்டியுள்ளதாகவும் இது குறித்து பாடசாலை நிர்வாகத்திகு அறிவித்துள்ள போதிலும் கவனம் செலுத்த வில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை எட்டு மணியளவில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்ப மாகும் வேளையில் இவ்வாறு மாணவர்களை நாய் சீண்டியதை தொடர்ந்து அச்சமடைந்த ஏனைய மாணவர்கள் வீடுகளுக்கு ஓடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மல்கெலிய வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க