வணிக செய்திகள்

கோழி இறைச்சிக்கான கேள்வி 40 வீதத்தால் குறைந்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கோழி இறைச்சிக்கான கேள்வி குறைந்துள்ளதாக அனைத்து கோழி வளர்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து கோழி இறைச்சிக்கான கேள்வி 40 வீதத்தால் குறைந்துள்ளதோடு கோழிகளுக்கான விலையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நாள்பட்ட கோழிகளை பயனின்றி அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கோழி பண்ணையாளர்கள் தற்போது அடைந்திருக்கும் நட்டத்தினால் கடன் உதவிகளை கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க