வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தற்போது கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதனால் அதிகளவானோர் நாய்க்கடிகளுக்கு இலக்காகி வருவதுடன் விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக பிரதான வீதி மற்றும் நகரின் வர்த்தக நிலையங்களை அண்மித்த பகுதி மற்றும் பாடசாலை பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுவதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க