உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அனுபவிக்கத் தயார்! – ரிஷாட்

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தனக்கு தொடர்பிருப்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையைக்கூட அனுபவிக்கத் தயார் என்று இராஜினாமா செய்த முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சூளுரைத்துள்ளார்.
சிங்கள இனவாதிகளுக்குப் பயந்து தாம் அமைச்சுப் பதவியை துறக்கவில்லை என்று தெரிவித்த அவர்இ நாட்டிற்காகவே அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததாகவும் கூறினார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களை பதவிநீக்கம் செய்யுமாறும் பிக்குமார்களும் பலரும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன்இ தன்மீதான குற்றச்சாட்டுக்களை மீண்டும் முழுமையாக நிராகரித்தார்.

கருத்து தெரிவிக்க